ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 24 மாணவர்கள் பலி ஆகியிருக்கலாம் என அச்சம்
ஐதராபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றபோது அங்கு 7 மாணவிகள் உட்பட சுமார் 24 மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 24 பேரில், 5 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மீதம் உள்ள மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர் விக்னன ஜோதி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 2 ஆம் ஆண்டு மாணவர்கள் சுமார் 46 பேர் 10 நாள் சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
இவர்களில் 24 பேர் ஆற்றிற்கு அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை அடித்து செல்லப்பட்டனர்.
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 24 மாணவர்கள் பலி ஆகியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது