வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (16:12 IST)

கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தற்கொலை – டெல்லியில் நடந்த சோகம் !

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சோதனைக்கு பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா  திரும்பிய பஞ்சாபை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு யாரும் எதிர்பாராத விதமாக அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.