1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:43 IST)

கால்நடை கடத்தல் வழக்கு: முதல்வர் மம்தாவின் நெருங்கிய உதவியாளர் கைது!

mamtha
கால்நடை கடத்தப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக இருப்பவர் அனுபிரதா மொண்டல். இவரை இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர் 
 
 கடந்த 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சிபிஐ கைது செய்ததாகவும் அவருடன் நடத்திய விசாரணையில் தற்போது அனுபிரதா கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ஆசிரியர்கள் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது