1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (10:06 IST)

கொரோனா Super Spreading Event என்றால் என்ன? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

பொதுமுடக்க தளர்வு அதிகப்படியாக வழங்கப்பட்டிருப்பதால் அதி தீவிர தொற்று பரவல் (Super Spreading Event) அபாயம் ஏற்படவுள்ளதாக அச்சம். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 66,85,082 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,03,569 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,62,490 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,19,023 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் பல கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அதி தீவிர தொற்று பரவல் (Super Spreading Event) அபாயம் ஏற்படவுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது செப்டம்பர் வரை சீராக இருந்த பரவல் எண்ணிக்கை தற்போது இரண்டாம் கட்ட அலையை போல அதிகரிக்க துவங்கியுள்ளது. இது அதிதீவிர பரவலாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உள்ளஹாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.