1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (17:11 IST)

வீட்டுக்கு 4 ஏசி இருந்தால் மின் தடை வரத்தான் செய்யும்: அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி..!

Air Conditioner
கேரளாவில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஏசி இருந்தது ஆனால் இப்போது வீட்டுக்கு நான்கு ஏசி உள்ளது அதனால் தான் மின்தடை ஏற்பட்டது என்று அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுத்துவது குறித்து கூறிய கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு ஏசி இருந்த நிலையில் தற்போது நான்கு ஏசிகள் உள்ளன குறிப்பாக அதிக மின்சாரம் உபயோகப்படுத்தப்படுவதால் மின்தடை ஏற்படுகிறது என்று டிரான்ஸ்பார்மர் ட்ரிப் ஆகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் மின் உற்பத்தியும் குறைவாக இருக்கிறது என்றும் ஒருநாள் மின்சாரத்திற்காக 15 கோடி ரூபாய் செலவு செய்து வெளியில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவதாகவும் புதிய மின் உற்பத்தி திட்டத்திற்கு கேரளாவில் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்

கேரளாவில் 3000 டிஎம்சி தண்ணீர் இருந்தும் 300 டிஎம்சி தண்ணீர் உபயோகித்து தான் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் ஜூன் மாதம் பத்தாம் தேதிக்குள் மழை இல்லை என்றால் மின்தடையை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கிருஷ்ண குட்டியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva