1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:56 IST)

கேரளாவில் இன்றும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் இன்று 30,203 பேருக்கு கொரொனா தொற்று தாக்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,687 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 115 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,17,004 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 20,788அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்றைய நிலவரப்படி கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,18,892 என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,60,152 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.