தொடர்புடைய செய்திகள்
- ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கூடுதல் டிக்கெட்கள் விற்பனை...
- பாஜக செய்யும் திசை திருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.- அமைச்சர் உதயநிதி
- தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் - முதல்வர் அறிவிப்பு
தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து ஜனசேனா போட்டி- நடிகர் பவன்கல்யாண்
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது ஆந்திர பிரேதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின், சிறை வாயிலில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..
அப்போது அவர் கூறியதாவது: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தாங்க முடியாது. எனவே அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் ஜனசேனா கட்சியும் இணைந்து செயல்படும் என்று கூறினார். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் மகன் மற்றும் அவரது மைத்துனர் பாலகிருஷ்ணா ஆகியோர் இருந்தனர்.
சமீபத்தில், ''மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் சந்திரபாபு நாயுடு என்றும் பொய் வழக்குகள் மற்றும் சட்டவிரோத கவிதைகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது'' என்றும் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
