1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:41 IST)

ஐபிஎல் வந்தாலே வந்துடுவாங்க..! மீண்டும் ஐபிஎல் சூதாட்டம்! – மத்திய பிரதேசத்தில் கைது!

மத்திய பிரதேசத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்று விடுமுறை நாளானதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன். மதியம் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியும், மாலை மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் போட்டியும் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டிகள் மீது முறைகேடாக சூதாட்டமும் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் இப்படியாக ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து கட்டிடம் ஒன்றில் சோதனை செய்த போலீஸார் 5 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.