இந்தியாவில் முதன்முறையாக இருமுறை உருமாறிய கொரோனா! – சுகாதாரத்துறை அமைச்சகம்!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 25 மார்ச் 2021 (08:24 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வரும் நிலையில் இருமுறை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிவிட்ட நிலையில் சமீப காலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதும், மற்ற நாட்டு மாற்றமடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 10,787 மாதிரிகளை சோதனை செய்ததில், 771 உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 736 மாதிரிகள் இங்கிலாந்து உருமாறிய கொரோனாவும், 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்க மற்றும் ஒரு பிரேசில் உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சில மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில் இருமுறை உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா எதிர்ப்புசக்திகளுக்கு கட்டுப்படாதது. மேலும் தொற்றை அதிகரிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

பிரிஞ்சி வாழ முடியாது!.. ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள்!..

விஜய் ஆட்சியில் மேலும் 2 எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்சரிங் கிளஸ்டர்கள்.. மத்திய அரசு ஒப்புதல்..

வீசும் காற்றில் விஷம் பரவட்டும் தோழர்!.. பா.ரஞ்சித்துக்கு மோகன்.ஜி பதிலடி!...

கப்பலை அட்டாக் பண்ணா ஈரான் பணத்தில் கை வைப்போம்!. டிரம்ப் வார்னிங்!..

நீட் பிரச்சனையை வைத்து மதக்கலவரத்தை தூண்டும் பதிவுகள்.. பாகிஸ்தானின் 480 சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments