1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (18:46 IST)

13.5 கோடி மக்களில் ஆதார் ரகசியங்களுக்கு ஆபத்து!!

ஆதார் எண் வைத்திருக்கும் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மூலம் வெளியாகியுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற நடைமுறைகளே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் முறையற்ற பாதுகாப்பு வழிமுறைகளால் வெளியாகியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.