வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (20:34 IST)

நான் மிகுந்த மன வேதனையோடு இருக்கிறேன் - கண்ணீருடன் முதல்வர் பேச்சு

கர்நாடக மாநிலத்தின் முதல் அமைச்ராக இருப்பவர் ஹெச்.டி குமாரசாமி. இவர் : தான் மிகுந்த மனவேதனையுடன் நாட்களை கடந்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வராகம் இருப்பவர்  ஹெச்.குமாரசாமி. இவரது தலைமயிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சமீபகாலமாக அம்மாநில அமைச்சரவையில் பங்கீடு, துறை ஒதுக்கீடு போன்றவற்றில் இந்த இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.  இதனால் முதல்வர் குமாரசாமி மிகுந்த நெருக்கடியில் உள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குமாரசாமி ;
 
எங்கல் கட்சியில் ஒரு எம்.எல்.ஏ எனக்கு போன் செய்து, பாஜக எனக்கு ரு 10 கோடி கொடுப்பதாக கூறுகின்றனர். என்னை அக்கட்சிக்கு வருமாறு அழைக்கிறார்கள் என்றார்.
 
தற்போது பாஜக இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறது. நான் மனவேதனையில் உள்ளதை வெளியில் கூற முடியாது. பாஜகதான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் மக்களின் பிரச்சனைகளை நான் தீர்ப்பேன் .இவ்வாறு உருக்கமாக பேசினார். முதல்வரின் இப்பேச்சு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.