1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (22:45 IST)

டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
 

 
தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஆளுநர்கள் மாநாடு பிப்ரவரி 9  ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இந்த மாநாட்டில், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த மாநாட்டில், 23 மாநில ஆளுநர்களும் மற்றும் 2 துணை நிலை ஆளுநர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.