1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:18 IST)

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் 4 பேருக்கு மேலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதையும் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் கர்நாடகா ஆந்திரா கேரளா டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் மட்டும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து டெல்லியில் இதுவரை மொத்தம் ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்