1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (14:13 IST)

அந்தமான் கடல் பகுதியில் பருவமழையின் முதல் சூறாவளி! எப்போது தெரியுமா?

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் இந்த வார இறுதிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல்.


சீரற்ற தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு, தென்மேற்குப் பருவமழையின் போது தென் அந்தமான் கடல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இந்த ஆண்டு முதல் சூறாவளி உருவாகி, தீபாவளியின் போது அல்லது அதற்குப் பிறகு கேரள மாநிலத்திற்கு ஏராளமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, வியாழக்கிழமை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தற்போதைய நிலவரப்படி, வானிலை அமைப்பு வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25-26 தேதிகளில் ஆந்திரா-ஒடிசா எல்லைக் கடற்கரையை அடையக்கூடும்.

இதனால் இந்த வார இறுதிக்குள் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இதில் வடக்கு கேரளா பகுதிகளில் தீவிர கனமழை பெய்யக்கூடும். மேலும், இது முன்னறிவித்தபடி புயலாக உருவானால், வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

வடகிழக்கு பருவமழை அறிவிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு முன் பூர்த்தி செய்யாவிட்டால், புயலுக்குப் பிறகுதான் அதன் தொடக்கத்தை அறிவிக்க முடியும் என்று தகவல்.

2022ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டில் ஏற்பட்ட முதல் சூறாவளி 'ஆசானி, இது வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகி மே 11ஆம் தேதி, மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 40 கிமீ தொலைவிலும், ஆந்திராவின் நர்சாபூருக்கு தென்மேற்கே 50 கிமீ தொலைவிலும் கரையைக் கடந்தது.
 
Edited By: Sugapriya Prakash