வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2015 (11:38 IST)

புனே திரைப்படக் கல்லூரி விவகாரம் : மருத்துவமனையில் மாணவர் அனுமதி

புனே திரைப்படக் கல்லூரியின் முதல்வரை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த மூன்று மாணவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பழமையான திரைப்படக்கல்லூரிகளில் புனே திரைப்படக் கல்லூரியும் ஒன்று. இந்த திரைப்படக் கல்லூரியின் புதிய முதல்வராக பா.ஜ.க. வை சேர்ந்தவரும், பிரபல தொலைக்காட்சி நடிகருமான கஜேந்திரா சவுகான்  நியமிக்கப்பட்டார்.



ஆனால் ஜவுகானின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்,அவரை திரும்ப பெறக் கோரி பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புனே திரைப்படக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர் கடந்த வியாழன் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களில் ஒருவருக்கு உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.