1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:46 IST)

நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

நாளை நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் சமயம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனாலும் முறைப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வேலையாக வேளாண் சட்டம் திரும்ப பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.