1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (14:44 IST)

போலி ஃபேஸ்புக்: பொறியியல் மாணவர் கைது

காதலிக்க மறுத்த பெண் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் ஆபசமாக பதிவிட்ட பொறியியல் மாணவன் கைது செய்யப்பட்டார்.


 

 
புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன், அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மாணவன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
 
அந்த பெண் தொடர்ந்து அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அவரை விட்டு விலகி இருக்குமாறு கூறியுள்ளார். இதில் கோபமடைந்த மாணவன், அந்த பெண்னை பழிவாங்க நினைத்து ஃபேஸ்புக்கில் போலி கணக்கு ஒன்று தொடங்கினார்.
 
அந்த பெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
அந்த மாணவனை நீதிமன்ற வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.