1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 4 நவம்பர் 2015 (23:09 IST)

அமைச்சர்கள் தீபாவளி பரிசுப்பொருட்கள் வாங்ககூடாது: கெஜ்ரிவால் கடும் நெருக்கடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது அமைச்சரவை சகாக்களோ அல்லது கட்சியினரோ யாரிடமும் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உத்தரவிட்டுள்ளார்.
 

 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடெங்கும் நவம்பர் 10ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடை, பட்டாசு மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் போன்றவற்றை அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு தொழில் அதிபர்களும், பொது மக்களும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
இந்த கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரும் தீபாவளி பரிசு பொருட்கள் யாரிமும் வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும், தீபாவளி பரிசு யாரும் கொண்டுவரக் கூடாது என டெல்லி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது வீடு மற்றும் அலுவலகம் முன்பு எழுதி ஒட்டியுள்ளனர்.