வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (16:02 IST)

டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்...

நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வுகாணப்படாமல் இருகின்ற நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மக்களால் தேர்தல் மூலமாக பதிவியில் வைக்கப்படும் ஆட்சியாளர்கள் தாங்கள் பதவி ஏற்றதும் மக்களை மறந்து விட்டு  தம் சொந்தக் காரணங்களுக்காகவே பதவிகாலத்தின் போது உள்ள அதிகாரத்தை வீணடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இம்மாதிரி ஒரு போக்குதான் டெல்லியிலும் நடந்தது. அதாவது, அன்னாஹாசாரே உடன் இணைந்து  ஊழலுக்கு எதிராக போராடியவர்  கெஜ்ரிவால் .இவர்  சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியாகி நாட்டில் உயரிய பதவியான  ஐ.ஆர்.எஸ் எனும் வருமான வரித்துறையில் பணியாற்றிய முன்னாள் அரசு அதிகாரி ஆவார்.
 
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நீண்டகாலமாக முதல்வராக இருந்த கங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலாதீட்சித்தை தோற்கடித்து ஆட்டிக்கு வந்தார் என்பதைவிட மக்கல் ஒரு படித்தவர் மீது வைத்த நம்பிகையின் பொருட்டு டெல்லி மாநில முதல்வரானார். 
ஆனால் அடுத்தடுத்து சில  புதிரான நடவடிக்கைகளில் இறங்கி மீடியாக்களின் கேலிக்கும் ஆளாகினார்.
 
இதனையடுத்து கடந்த பிரவரி மாதம் 20 ஆம்தேதி தன் வீட்டில் நடந்த ஆலோசனனைக்கூட்டஹ்தில்  தல்லைமைச்செயலர் அன்ஷு பிரகாஷை கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மொஇ எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பாட்டியாலயா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கையில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால்,துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11எம்.எல்.ஏக்களின் மீது பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
 
இத் சம்மந்தமாக வழக்கு பாட்டியாலயா நீதிமன்றத்ஹில் நடைபெற்று வந்த நிலையில் மௌஹ்டல்வர் கெஜ்ரிவால்,துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட அனைத்து எம்.எல்.ஏக்க்ளுக்கும் நீதிமன்ற இன்று ஆமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.