1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (21:44 IST)

நித்தியானந்தாவின் சொத்து விவரங்களை சேகரிக்க நீதிமன்றம் உத்தரவு !

நித்தியானந்தாவின் சொத்து விபரங்களை சேகரிக்க நீதிமன்றம் உத்தரவு !

சமீபத்தில் பல்வேறு புகார்களுக்கு ஆளாகியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு, நித்யானந்தா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரும் ஆஜராக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து, ராம் நகர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் நித்யானந்தா மற்றும் அவரது செயலர் கோபால் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகவில்லை.
இதனையடுத்து, ராம் நகர் நீதிமன்றம், நித்யானந்தா மற்றும் கோபால்ரெட்டி ஆகியோரின் சொத்து பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிடதி ஆசிரமம் மற்றும்  நித்யானந்தாவுக்கு சொந்தமாகவுள்ள பிற ஆசிரமங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.