வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (10:46 IST)

தளர்த்தப்பட்ட ஊரடங்குகள்; 37 லட்சத்தை தாண்டிய கொரோனா!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மொத்த கொரோனா பாதிப்புகள் 37 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,356 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 37,69,523 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,045 பேர் உயிரிழந்ததால் மொத்த இறப்பு எண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 29,01,908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.