1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2016 (13:46 IST)

குழந்தைகள் பாலியல் கொடுமை: கடும் தண்டனைக்கு வகை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.


 

 
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.
 
இந்நிலையில், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க நாடாளுமன்றம் வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
அதன்படி, நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டால், தனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.
 
இதன்படி புதிய சட்டம் கொண்டு வந்தால், பெற்றோர்கள் அச்சம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.