1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (21:20 IST)

சிதம்பரம் கைது : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் !

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு இன்று மதியம் 3.15 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார்.சிபிஐ தரப்புக்காக ஆஜராகியுள்ள இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் இடையே காரசாரமான வாதம் நடந்து வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு இன்று மதியம் 3.15 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. 
 
இந்நிலையில் சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது ; பார்லிமெண்டில் பெரும்பான்மையுடன் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது  தற்போது நிலவும் சூழல் போல் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் கடந்த 1984 ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி  பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சிப் ம்பொறுப்பை ஏற்றபோது, அதிகாரத்தை தவறுதலாகப் பயன்படுத்தி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு, ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் எதையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.