1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (05:27 IST)

தமிழகம் மற்றும் ஆந்திராவில் பட்டையக் கணக்காளர் தேர்வு ஒத்திவைப்பு

தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடைபெற இருந்த பட்டையக் கணக்காளர் தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை மோசமாகியுள்ளது.
 
மேலும், ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து அடித்து நொறுக்கிறது.
 
இதனையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடைபெற இருந்த  சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும்.