1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 30 ஜனவரி 2016 (03:27 IST)

என்னை அழிக்க சந்திரபாபு நாயுடு சதி: நடிகை ரோஜா அலறல்

என்னை அழிக்க சந்திரபாபு நாயுடு சதி: நடிகை ரோஜா அலறல்

என்னை அழிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனிதா எம்.எல்.ஏ.வை பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளார் என்று நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 20 மாத ஆட்சியில் ஊழல்தான் முன்னிலை வகிக்கின்றது. அவர் கொடுத்த 400 வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. இதனை தட்டிக் கேட்டால், சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர்.
 
கந்து வட்டி வியாபாரத்தில் தெலுங்குதேச பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்களால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். குறிப்பாக தலித் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்காக போராட அனிதா முன்வரவில்லை. மாறாக, இது குறித்து கேள்வி கேட்ட என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என்னை அழிக்க சந்திரபாபு நாயுடு, அனிதாவை பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.