1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (10:19 IST)

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு போலியானது! – மத்திய அரசு எச்சரிக்கை!

south railway
ரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போலியானது என மத்திய ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் அவ்வபோது காலியிடங்கள், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். சமீபத்தில் அவ்வாறான இந்திய ரயில்வேயில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் ரயில்வே பெயரிலேயே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு போலியானது என்றும், யாரும் இதுபோன்று அறிவிப்பு வெளியிட்டு வரும் இணையதள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Edit By Prasanth.K