வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (10:53 IST)

10.45 கோடி கொரோனா தடுப்பூசி போட்டாச்சு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் இதுவரை 10.45 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல். 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,70,179 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 12,01,009 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் இதுவரை 10.45 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் இந்தியாவில் ஒரே நாளில் 29.33 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.