1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (13:15 IST)

அனைத்து பள்ளிகளில் தாய்மொழிதான் முக்கியம்! – மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேச வேண்டும் என மத்திய கல்வி துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில், பல பள்ளிகளில் தாய் மொழி தவிர்த்த பிற மொழிகளுக்கான பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தாய்மொழி குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம் புதிய கல்வி கொள்கையின்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தகவல் பரிமாற்றத்திற்கு தாய் மொழியையே பயன்படுத்த வேண்டும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என கூறப்பட்டுள்ளது.