1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (08:33 IST)

லாலு பிரசாத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை: பீகாரில் பரபரப்பு!

lalu
முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு சில வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் இன்று அதிகாலை திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அது சம்பந்தமாக தற்போது சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது