1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (14:05 IST)

நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்

Cauvery
நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது
 
நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
 
Edited by Mahendran