Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஏற்படும் சூரிய கிரகணம் வெறும் கண்களால் பார்க்கலாமா?

Written By Sasikala
Updated: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:47 IST)
சூரியன்-பூமி-சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. இந்தியாவில் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

 
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று  ஏற்படும். சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும் நிலையில் முழு சூரிய கிரகணம் இன்று (21/08/2017) திங்கள் கிழமை அமாவாசை தினத்தில் இரவு இந்திய நேரப்படி இரவு 9.15 முதல் இரவு 2.34 வரை தோன்றுகிறது.
 
இந்த அரிய சூரிய கிரகணம் சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை  'நாசா' மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும். இந்தியாவில் தெரியாது  எனவும் கூறப்படுகிறது.
 
சூரிய கிரகணத்தின்போது முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது,  சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள்  கூறுகின்றன.
 
கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, உணவு கெட்டுப்போய்விடும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனை மகப்பேறு  நிலையில் உள்ள ஒரு பெண்மணியை வைத்து சோதனை செய்தபோது அவர்களுக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்பது  நிரூபணமானதாக கூறப்படுகிறது.
 
இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஒரு முழு சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. அதை வெறும் கண்களால்  பார்க்கக்கூடாது என நாசா மையம் அறிவுறுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..

எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?

ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments