செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:30 IST)

டெல்லி வன்முறை; செய்தியாளர்கள் மீது தாக்குதல்..

சிஏஏக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இரு தரப்பினருக்கும் வன்முறை வெடித்ததில் செய்திகளை சேகரிக்கச் சென்ற 2 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

சிஏஏக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்த நிலையில், சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கலவரம் முண்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடுமையாக காயம் அடைந்த அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.