1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (11:03 IST)

ராஜினாமா செய்த கமல்நாத்தை தேடி சென்ற பாஜக மூத்த தலைவர்!

பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கமல்நாத்தை சந்தித்து பேசியுள்ளார். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும் அவர் தனது மெஜாரிட்டியை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி நிரூபிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
 
இதன்படி முதல் அமைச்சர் கமல்நாத் நேற்று தனது மெஜாரிட்டியை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே முதலமைச்சர் கமல்நாத் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கமல்நாத்தை சந்தித்து பேசியுள்ளார். 
 
பதவி விலகிய அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக சவுகான் தெரிவித்தாலும், இதன் பின்னணியில் ஏதேனும் இருக்க கூடுமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்தல் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக கூடும் என தெரிகிறது.