வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2015 (18:08 IST)

பீகாரில் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

பீகாரில் 32 தொகுதிகளில் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் 55 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 49 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது 

இதனைதொடர்ந்து, இரண்டாம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியான கயா, ஜெகனாபாத் அவுரங்காபாத், அர்வால், கைமூர், ரோதாஸ் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 32 தொகுதிகளில் 9119 மையங்களில் இரண்டாம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம்  மிகுந்த பகுதிகள் உள்பட  32 தொகுதிகளில் 55 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம்  மிகுந்த பகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.