செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (14:06 IST)

பீகாரில் மது விற்பனைக்குத் தடை: நிதிஸ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


 

 
பீகாரில் சமீபத்தில் பதவியேற்ற நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அம்மாநிலத்தில் வரும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்படுவதாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
அத்துடன், பீகார் மாநிலத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை நிதிஷ் குமார் பாராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.