1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (12:46 IST)

இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?

இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?
முறைப்படி பரத நாட்டியம் பயின்ற பெண் கலைஞர் ஒருவருக்கு  இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் இந்து கோவில் விழாவில் பரத நாட்டிய கலைஞரான சௌமியா சுகுமாரனுக்கு தடை விதிக்கப்பட்டது. முறைப்படி பரதநாட்டியம் பயின்றும் செளமியா சுகுமாரன் கிறிஸ்துவர் என்பதால் இந்து கோவிலில் நடனம் ஆட கூடாது என விழாக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது 
 
பரதநாட்டியத்தை முறைப்படி பயின்றபோதிலும் வேறு மதம் என்பதால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செளமியா சுகுமாரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.