1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (12:07 IST)

QR Code டிக்கெட்களுக்கு மெட்ரோவில் அமோக வரவேற்பு!

ஒரே நாளில் பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்த கிட்டத்தட்ட 2,000 பேர் QR குறியீடு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.


நேற்று வாட்ஸ்அப் மற்றும் நம்ம மெட்ரோ செயலி மூலம் பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்த கிட்டத்தட்ட 2,000 பேர் QR குறியீடு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். QR அடிப்படையிலான டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாள் இதுவாகும்.

டிக்கெட்டுகளைப் பெற்றவர்களில் 65% க்கும் அதிகமானோர் பிஎம்ஆர்சிஎல் வாட்ஸ்அப் சாட்போட், பாக்யாவைப் பயன்படுத்தினர், மீதமுள்ள பயணிகள் நம்ம மெட்ரோ செயலியைப் பயன்படுத்தினர். முதல் நாளில் பெரிய குளறுபடிகள் எதுவும் இல்லை என்றும், ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

QR-குறியீட்டு டிக்கெட்டுகளைப் பெற, பயணிகள் 8105556677 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஹாய் எனச் செய்தி அனுப்பலாம். நுழைவு நிலையம் மற்றும் சேரும் நிலையத்தைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டுகளை வாங்கலாம். ஆங்கிலம் அல்லது கன்னடத்தில் தேர்வு செய்வதற்கான விருப்பம், ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்தல் மற்றும் வாட்ஸ்அப் UPI மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த சாட்பாட் வருகிறது.

அதுமட்டுமின்றி, ஒரு நபருக்கு மிக அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம், பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நேரம் மற்றும் இரண்டு குறிப்பிட்ட நிலையங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான செலவு ஆகியவற்றையும் இது வழங்குகிறது. பிஎம்ஆர்சிஎல், QR குறியீடு டிக்கெட்டுகளை சேவை செய்யக்கூடிய நாள் முடியும் வரை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

இருப்பினும், நாள் இறுதிக்குள் அவை பயன்படுத்தப்படாவிட்டால், டிக்கெட்டை ரத்து செய்யலாம் மற்றும் பணம் திருப்பித் தரப்படும். QR குறியீடு டிக்கெட்டுகளைப் பயன்படுத்துவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
Edited By: Sugapriya Prakash