வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (21:16 IST)

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை : ஏ.டி.எம். முடங்குமா?

வருகிற 24ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியா நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் பண வர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
24ஆம் தேதி ஹோலி பண்டகை, 25ஆம் தேதி புனிதவெள்ளி, 26 சனிக்கிழமை விடுமுறை, 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பணபரிமாற்றம் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் எனத் தெரிகிறது. 
 
முக்கியமாக ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சிகள் மூலமாக செய்து வந்தாலும், தொடர் விடுமுறையால், ஏ.டி.எம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.