செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 3 மே 2017 (23:46 IST)

வயிற்றில் ஒரு கூடுதல் தலை: ஜெய்ப்பூரில் ஒரு அதிசய குழந்தை

பொதுவாக இரட்டை குழந்தை வயிற்றில் உருவாகி அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் இரட்டை தலை, ஒரே தலை இரண்டு உடம்பு என்று அபூர்வமாக குழந்தை பிறப்பதுண்டு



 

அப்படி ஒரு பிரச்சனை ஜெய்ப்பூரில் உள்ள பெண் ஒருவருக்கு நிகழ்ந்தது. இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஆசையுடன் காத்திருந்தவருக்கு பிறந்த குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் குழந்தையின் வயிற்றில் கூடுதலாக ஒரு தலை ஒட்டியிருந்தது.

பின்னர் மருத்துவர்கள் குழு ஆலோசித்து வயிற்றில் உள்ள தலையை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்தனர். பலமணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வயிற்றில் இருந்த கூடுதல் தலை அகற்றப்பட்டு தற்போது குழந்தை ஒரே தலையுடன் ஆரோக்கியமாக உள்ளது.