1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (20:07 IST)

ஆள் இல்லாத அறையில் தானாக நகர்ந்த நாற்காலி : காவலர் பீதி ...வைரல் வீடியோ

சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் , ஒரு சக்கர நாற்காலி தானாக நகர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.
 
அதாவது, இரண்டு இருக்கைகளுக்கு இடையே நிறுத்தி வைக்கபட்ட ஒரு சக்கர நாற்காலி திடீரென முன்னோக்கி நகர்ந்து சென்றது.
 
இதைப் பார்த்த காவலாளி சற்று அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், சக்கர நாற்காலி வைக்கப்பட்ட அறையில் வழுவழுப்பான தரைதளம் என்பதால் அது காற்றில் நகர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.