1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:31 IST)

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதோர் வீடுகளிலேயே இருந்துக் கொள்ளலாம்: அசாம் முதல்வர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்றும் வெளியில் வர வேண்டாம் என்றும் அசாம் மாநில முதலமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அசாம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் வீடுகளிலே இருந்து கொள்ளுங்கள் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு பங்கேற்க முடியாது என்றும் உணவகங்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்றும் தாராளமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்
 
ஆனால் மக்கள் வெளியே வர வேண்டும் என்றால் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்