1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2015 (08:09 IST)

டெல்லியில் மெட்ரோ ரயில்சேவையை அதிகரிக்க வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.


 
 
இது குறித்து மெர்டோ ரயில் நிர்வாகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "நெரிசல் மிகுந்த நேரம் மட்டுமின்றி அவ்வாறு அல்லாத தருணங்களிலும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.  இத்தகைய சேவையை மேற்கொள்ளும் போது அதில் இழப்பு ஏற்பட்டால் அதனை டெல்லி அரசு ஈடுகட்டும். தற்போது இயக்கப்பட்டு வரும் 125 ரயில்களின் சேவை போதவில்லை" இவ்வாறு அந்தக் கடிதத்தில் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.