தொடர்புடைய செய்திகள்
- சாத்தூர் பட்டாசு ஆலை: வெடி விபத்தில் 19 பேர் உயிரிழப்பு !
- பட்டாசு ஆலை விபத்து - 11 பேர் பலி!
- நெருங்கி வரும் தேர்தல்; விலை குறைந்தது பெட்ரோல்!
- 5 வயது குழந்தைக்காக 6 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ரத்து! – மத்திய அரசு அறிவிப்பு!
- வன்முறை, ஆபாச பதிவுகளுக்கு எதிரான நடவடிக்கை! – ட்விட்டருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
அதிகாலையில் ஆந்திராவில் கொடூர விபத்து; குழந்தைகள் உட்பட 14 பேர் பலி!
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நெடுஞ்சாலையில் சித்தூரை சேர்ந்த 18 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது வேகமாக ஆம்னி வேன் மோதியுள்ளது. இதனால் 8 பெண்கள், ஒரு குழந்தை, 5 ஆண்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
