1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:40 IST)

நான்தான் ஆட்சி அமைப்பேன்.. கிருஷ்ணர் கனவுல வந்து சொன்னார்! – அகிலேஷ் யாதவ்!

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தனது கட்சியின் ஆட்சியமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பகவான் கிருஷ்ணர் தினமும் எனது கனவில் தோன்றி உத்தரபிரதேசத்தில் எனது தலைமையிலான ராமராஜ்ஜியம் அமையும் என சொல்கிறார். ராமராஜ்ஜியம் அமைப்பதற்கான வழி சோசியலிசம்தான். நமது மாநிலத்தை யோகி ஆதித்யநாத் தோல்வி அடைய வைத்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.