வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:37 IST)

ஓய்வு பெற்ற பின்னரும் வேலை பார்க்கலாம்: ஏர் இந்தியா அறிவிப்பு!

airindia
டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்டுகள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஓய்வு பெற்ற பின்னரும் 7 வருடங்கள் பணி புரியலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது
 
58 வயதில் ஓய்வு பெற்ற பின் ஓய்வு பெறும் விமானிகளின் தரம் மற்றும் பணி நடைமுறைகள் சரிபார்க்கப்படும் என்றும் அதனை அடுத்து ஐந்து வருடங்களுக்கு கூடுதலாக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் 5 வருடங்கள் முடிந்த பின்னர் கூடுதலாக 2 வருடங்கள் பணி புரியலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
 
65 வரை விமானம் ஓட்டுவதற்கு அனுமதி உண்டு என்பதால் தகுதியான நபர்கள் 65 வயது வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஏர் இந்தியா விமானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.