வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (12:09 IST)

பள்ளி மாணவிகள் முன் ஆபாசமாக நின்ற கும்கி நடிகர் கைது

பள்ளி மாணவிகள் முன் ஆபாசமாக நின்ற கும்கி நடிகர் கைது

பள்ளி மாணவிகளின் முன்பு, ஆபாசமாக நின்றதாகவும், அவர்களுடன் புகைப்படம் எடுத்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் மலையாள நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கேரளாவின் ஒற்றப்பாலம் அருகில் பத்திரிப்பாலா எனும் பகுதியில் ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த 27ம் தேதியன்று, பள்ளிக்கு அருகில் இருந்து பேருந்து நிறுத்தத்தில், மாணவிகள் சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு கார் வந்து நின்றது.

காரின் உள்ளே இருந்த நபர், ஆடையின்றி நிர்வாணமாக இருந்துள்ளர். அதோடு மட்டுமில்லாமல் அவர்களின் முன்னே செல்பியும் எடுத்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சியைடைந்த மாணவிகளில் சிலர், அந்த கார் எண்ணை குறித்து போலீசாரிடம் அளித்தனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த கார் மலையாள சினிமா நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பது தெரிய வந்தது.

இவர் ஏராளமான மலையாளப் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த கும்கி திரைப்படத்தில் வன அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் வேட்டை படத்திலும் நடித்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீஜித் “காரில் இருந்தது நான் இல்லை, நானாக இருந்திருந்தால் மாணவிகள் தன்னை எளிதாக அடையாளம் கண்டிருப்பார்கள். அந்த கார் எண் என்னுடையதுதான். ஒருவேளை மாணவிகள் கார் எண்ணை தவறுதலாக குறித்திருக்கலாம். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் படப்பிடிப்பில் இருக்கும் போது போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.