1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (14:08 IST)

பீகாரில் ஓடும் ரயில் செல்போன் பறிக்க முயற்சி...திருடனுக்கு திகில் காட்டிய பயணிகள்!

bihar
பீகாரில் ஜமால்பூர் – சாஹிப்கஞ்ச் பயணிகள் ரயிலில் லைலாக் மற்றும் கோகா ஆகிய நிலையங்களுக்கு இடையே ஒரு திருடன் ஜன்னல் வழியேசெல்போனை திருட முயன்றபோது பிடிபட்டு, உயிருக்குக் கெஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

பீகார் மாநிலத்தில்  நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி  நடந்து வருகிறது.

சமீபத்தில், இந்த மாநிலத்தில் ஓடும் ரயிலில்  பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்க முயற்சி செய்த ஒரு  நபரைக் கையும் களவுமாகப் பிடித்த பயணிகள், ரயில் பெட்டிக்குள் இருந்தபடி,  திருடனின் கையைப் பிடித்து, சுமார் 15 கிமீ தூரம் அவரை தொங்கியபடியே இழுத்துச் சென்றனர்.

ஓடும் ரயிலில் எதிர்க்காற்று அடிக்கும் வேகத்தில், திருடன் தன்னை விட்டு விடும்படி கதறியும் அவர்கள் அவனுக்கு இந்தக் கொடூர தண்டனை கொடுத்தனர்.

இந்த நிலையில் இதேபோன்று மற்றொரு திருடமுயன்று தோல்வியுற்ற கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

ஜமால்பூர் – சாஹிப்கஞ்ச் பயணிகள் ரயிலில் லைலாக் மற்றும் கோகா ஆகிய நிலையங்களுக்கு இடையே ஒரு திருடன் ஜன்னல் வழியே செல்போனை திருட முயன்றபோது, பயணிகள் அவரைப் பிடித்தனர்.

ஜன்னில் தொங்கியபடி, தன்னை விடும்படி, திருடன் கெஞ்சினார். அதன்பின், அவரை உள்ளே இழுத்து, பயணிகள் சரமாரியாக அடித்தனர்.

பீகாரில் உள்ள பாகல்பூர் பயணிகள் ரயிலில் ஜன்னல் வழியாக திருடர்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj