1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (15:31 IST)

14 வயது மாணவிக்குப் பிறந்த குழந்தை ...அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசித்து வருபவர் ஜெய்ராம் நாயக்(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்து வந்த  நிலையில், அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

இதில், கர்ப்பம் அடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள்  சேர்ந்து ஜெய்ராமுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர்.

இது தெரிந்து ஜெய்ராம் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக உள்ளதாக புகார் கூறினர்.

இந்த நிலையில் சிறுமி பள்ளி செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால்  மருத்துவமனையில் சேர்க்கபப்ட்ட அவருக்கு குழந்தை  பிறந்துள்ளது.

14 வயது சிறுமி தாயாகியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.