வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (13:13 IST)

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் விடுதலை: சுஷ்மா சுவராஜ்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், "எனது வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரை ஈரான் அரசு விடுவித்துள்ளது".


 
 
"சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் நாளை தாயகம் திரும்புவார்கள்".
 
"மீனவர்களை விடுதலை செய்ய உதவிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷாரிப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தனது டூவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.