வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 10 டிசம்பர் 2014 (18:21 IST)

7 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.
 
உத்தரப்பிரதேசம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முகந்த்பூர் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் குல்வன்ஷ். இவன் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று காணாமல் போனான்.
 
இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனால், குல்வன்ஷை காவல் துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் குல்வன்ஷ் நேற்று பிணமாக கிடந்தான்.
 
பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அந்த சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.